Wednesday, October 16, 2013

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் 10 நன்மைகள்!!!




முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் 10 நன்மைகள்!!!






 

பச்சை இலைக் காய்கறிகளில் முக்கியமானது தான் முட்டைக்கோஸ். ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் களைக்கோசு கூட இந்த குடும்பத்தை சேர்ந்தவைகளே. பெரிய அளவில் உருண்டையான இலை வகையை சேர்ந்த முட்டைகோஸ் கிழக்கு மெடிடேரேனியன் மற்றும் ஆசியாவில் இருந்ததாக நம்பப்படுகிறது. வருடம் முழுவதும் கிடைக்கும் இந்த காய் ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்றாகும். சுலபமாக அனைவராலும் வாங்கக்கூடிய மலிவு விலை காயாகவும் விளங்குகிறது முட்டைக்கோஸ்.

முட்டைக்கோஸிலேயே சிவப்பு மற்றும் பச்சை என பல வகைகள் உள்ளது. அவைகளை பச்சையாகவும் உண்ணலாம் அல்லது சமைத்தும் உண்ணலாம். சில காயை போல் அல்லாமல், இதனை பச்சையாக சாப்பிட்டாலும் சுவை மிகுந்ததாகவே இருக்கும். அவற்றின் சுவை லேசான இனிப்புடன் நுகர்வதற்கும், சுவைக்கும் நன்றாக இருக்கும். வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் வளமையாக உள்ள முட்டைக்கோஸில் கலோரிகளும் குறைவாக உள்ளது. இதனை கிழக்கு மற்றும் மேற்கு வகை உணவுகளில் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இப்போது அந்த முட்டைக்கோஸை உணவில் அதிகம் சேர்ப்பதால், எந்த மாதிரியான நன்மைகளைப் பெறலாம் என்று பார்ப்போமா!!!

புற்றுநோயை தடுக்க உதவும்

முட்டைக்கோஸில் உள்ள பல குணங்கள் புற்றுநோயை உண்டாக்கும் அணுக்களை எதிர்த்து போராடும். அதிலும் இதில் உள்ள சல்போரோபேன் மற்றும் இண்டோல் 3 கார்பினோல் புற்றுநோய் அணுக்களை எதிர்த்து போராடும் குணங்களை கொண்டவைகளாகும்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

முட்டைக்கோஸில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. அதனால் இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து இயக்க உறுப்புகளை அடக்கும்.

அழற்சியை எதிர்க்கும் குணங்கள்

இந்த காய்கறியில் அமினோ அமிலங்கள் அதிகமாக உள்ளதால், அழற்சியினால் ஏற்படும் மூட்டு வலியை எதிர்த்து போராடும்.

கண்புரை இடர்பாட்டை நீக்கும்

முட்டைக்கோஸில் உள்ள பீட்டா-கரோட்டின் கண்களில் ஏற்படும் மாக்குலர்த்திசு சிதைவில் இருந்து காக்கும். அதனால் கண்புரை வராமல் காக்கும்.

அல்சைமர் ஏற்படும் ஆபத்து குறையும்
முட்டைக்கோஸை உட்கொண்டால், முக்கியமாக சிவப்பு நிற முட்டைக்கோஸ், அல்சைமர் என்னும் ஞாபக மறதி ஏற்படுவதைத் தடுக்கும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு ஒன்று கூறுகிறது. அதற்கு காரணம் முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின் கே என்னும் சத்து தான்.

குடற்புண் சிகிச்சைக்கு உதவி புரியும்

குடற்புண் அல்லது வயிற்றில் ஏற்படும் அல்சரை குணப்படுத்த முட்டைக்கோஸை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் அதன் சாற்றில் உள்ள அதிக அளவிலான க்ளுடமைன், அல்சரை குணப்படுத்தும் குணங்களைக் கொண்டது.

உடல் எடை குறைய துணை நிற்கும்
எப்போதும் உடல் எடை மீது கவனம் கொண்டவர்கள் கண்டிப்பாக முட்டைக்கோஸை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு முழு கப் சமைத்த முட்டைக்கோஸில் வெறும் 33 கலோரிகள் தான் உள்ளது. அதனால் முட்டைக்கோஸ் சூப்பை எத்தனை கப் வேண்டுமானாலும் குடியுங்கள், அது எடையை அதிகரிக்காது.

மலச்சிக்கலுக்கு நிவாரணி

இதிலுள்ள நார்ச்சத்து சரியான செரிமானத்திற்கு உறுதுணையாக விளங்கும். அதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.

பொலிவான சருமம்

இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கியுள்ளதால் அது வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் இயக்க உறுப்புகளில் இருந்து பாதுகாத்து, பொலிவான தோற்றத்தை தக்க வைக்கும்.

தசை வலியில் இருந்து நிவாரணம்

முட்டைக்கோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசை வலிகளுக்கு நிவாரணம் அளிக்கும். எனவே தசை வலி இருக்கும் போது முட்டைக்கோஸை சமைத்து சாப்பிடுங்கள்.



 

உங்கள் பற்கள், ஆரோக்கியமாகவும் வெண்மையாகவும் இருக்க‍, சூப்பரான இயற்கை பேஸ்ட்கள்...!



உங்கள் பற்கள், ஆரோக்கியமாகவும் வெண்மையாகவும் இருக்க‍, சூப்பரான இயற்கை பேஸ்ட்கள்...!






 



பற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்க ளை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால் மட்டும் பற்கள் சுத்தமாகி விடுமா என்ன? பற்களை சுத்தப்படுத் தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத் தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என் று நினைக்க வேண்டாம். எப்போதும் செயற்கை பொருட்களை விட இயற் கை பொருட்களுக்கு நிறைய மகத்து வம் உள்ளது. அதேப்போல்தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப் பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் அனை த்தும் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள்தா ன். அது என்னவெ ன்று பார்ப்போமா!!!

வேப்பங்குச்சி

இது ஒரு பழங்கால முறை. இன் றும் கிராமப்பகுதிகளில் மக்கள் வேப்ப ங்குச்சியைப் பயன்படுத்திதான் தங்க ள் பற்களை துலக்குகின்றனர். அத னால் தான், அவர்கள் பற்கள் இன்று ம் உறுதியாக இருக்கிறது. ஏனெனில் வேப்பங்குச்சியில் நிறைய ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி பயோடிக் பொருள் இருக்கிறது. மேலும் இத னைக் கொண்டு பற்களை துலக்கி னால், பற்கள் நன்கு சுத்தமாக பளிச் சென்று, துர் நாற்றம் நீங்குவதோடு, பற்களில் நோய்கள் எதுவும் வராம லும் இருக்கும். ஆகவே வேப்பங்குச்சியை கொண்டு பற்களை துல க்க, முதலில் அந்த குச்சியை உடைத்து, அதன்ஒரு முனையை நன்கு மென்று, பின் தேய்க்க வேண்டும்.

உப்பு

உப்பைக் கொண்டும் பற்களை துலக்க லாம். ஏனெனில் இதில் சோடியம் அதிக ம் உள்ளது. இதனால் பற்களில் உள்ள அழுக்குகள் போவதோடு, ஈறுகளும் ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பற் களில் வலிகள் ஏற்பட்டால், அப்போது இதனைக் கொண்டு பற்களை துலக்க லாம். மேலும் இது வாய்துர்நாற்றத்தை ஏற்படாமலும் தடுக்கும். ஆகவே தினமு ம் ஒரு டீஸ்பூன் உப்பை எடுத்துக் கொண்டு, பற்களை துல க்குங்கள், பின் பாருங்கள் அதன் நன்மை எப்படி இருக்கிறதென்று.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயை வைத்து பற்களைதுலக்கினா ல், பற்கள் நன்கு வெள்ளையாக காணப்படும். இது வும் பற்களை துலக்க ஒரு சிறந்த முறை. அதற்கு அரை டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயோடு, சிறி து உப்பை சேர்த்து கலந்து, பற்களை துலக்க வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சையில் அதிகமான அளவு வைட்டமி ன் சி உள்ளது. இது பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்கும். பொதுவாக இந்த எலுமிச்சை எத்தகையஅழுக்குகள் என்றாலும் நீக்கிவிடும், அத்தகையது பற்களில் உள்ள அழுக்குகளை நீக்காமலா இருக்கும். ஆகவே அதற்கு தினமும் எலுமிச்சை சாற்றை வைத்து பற்களை மற்றும் ஈறுகளை தேய்க்க வேண்டு ம். பின் பாருங்கள் வாய் புத்துணர்ச்சியு டன் இருக்கும்.

கிராம்பு

கிராம்பில் நிறைய மருத்துவ குணங் கள் அடங்கியுள்ளன. அத்தகைய கிரா ம்பு பற்களும் மிகவும் சிறந்தது. ஆக வே சிறிது கிராம்பு பொடியை வைத்து பற்களை தேய்க்க வேண்டும். இதனா ல் பற்கள் வெள்ளையாக இருப்பதோ டு, பற்களில் வலிகள் ஏற்பட்டால், அத னை சரி செய்துவிடும்.

ஆகவே பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்க, மேற்கூறிய பொருட் களையெல்லாம் பயன்படுத்துங்கள், பற்கள் நன்கு பளிச்சென்று மின்னும்.